News September 2, 2025

ரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது!

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும், ரசாயனம் மருந்து உரங்களை குறைத்து, இயற்கை முறையில், உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, சாகுபடி செலவை குறைத்து பயன்பெற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதால் சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முடியாது என்றார்.

Similar News

News September 18, 2025

சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் சேவையில் மாற்றம்!

image

ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (செப்.18) சேலம் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (56108) திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படமாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 17, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் !

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.17) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 17, 2025

கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம் !

image

சேலம் கடைவீதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையினை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.492.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!