News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
Similar News
News April 2, 2025
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் நர்ஸ் வேலை

தருமபுரி அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. ஒட்டுனர்களுக்கு 10 வகுப்பில் தேர்ச்சியும், மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்.இ நர்ஸ்ங் முடித்திருக்க வேண்டும். 19-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்
News April 2, 2025
தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு?

வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
News April 2, 2025
தர்மபுரியில் இலவச உயர்கல்வி வழிகாட்டி முகாம் அறிவிப்பு

பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்” என்ற தலைப்பின் கீழ் நாளை (ஏப்.3) தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள ரோட்டரி ஹாலில் முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்கு பெறும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் மாணவர்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.