News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

Similar News

News April 2, 2025

சோடியம் நைட்ரேட் ஊசி செலுத்தி மாணவர் உயிரிழப்பு

image

கொடுங்கையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பால் யூட்டி கிளாஸ்(20), செல்போனுக்கு அடிமையான இவர் மன அழுத்தத்தில் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சோடியம் நைட்ரேட் ஊசியை தனக்கு தானே செலுத்தி மயக்கமடைந்துள்ளார். பதறிபோன பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்க வேண்டிய வயதில் இவ்வாறு நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News April 2, 2025

சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்

image

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போரது எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் (2025) மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, மார்ச் 7ஆம் தேதி அன்று 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ.ஆர். குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை டிக்கெட்டிற்கு 20% தள்ளுபடி செய்கிறது.

News April 2, 2025

பிரபல பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

image

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல பிலால் தனியார் ஓட்டலில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாந்தி மயக்கத்திற்கு உள்ளன 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியால் இவ்வாறு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!