News March 14, 2025
யோகா பயிற்சி பயிற்சிவிப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் பகுதிநேர யோகா பயிற்சிவிப்பாளர் பதவிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மார்ச்.28 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
Similar News
News March 4, 2026
தென்காசி: பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு; 4 பேர் கைது.!

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்ற நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடந்து வந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவர், சக்திவேல், மணிகண்டன், ராஜ்குமாா் ஆகியோருடன் திருட்டியது தெரியவந்துள்ளது.
News March 4, 2026
செங்கோட்டை – நெல்லை ரயில் தற்காலிக ரத்து

இன்று மார்ச் 4 ம் தேதி மற்றும் 6 ம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில், சேரன்மகாதேவியில் நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News March 4, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டம் (தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம் கொடுக்கபட்டுள்ளது.


