News August 27, 2024
யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி

நாகையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. இன்றைய காலகட்டத்தில் ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே புதிய கட்சிகள் தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது எனத் தெரிவித்தார் அவர்.
Similar News
News November 3, 2025
நாகை: SIR சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பயிற்சி

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் SIR சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரண்யம் சார் ஆட்சியர் அமித் குப்தா கலந்து கொண்டு தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விளக்கினார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
News November 3, 2025
நாகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
நாகை: பாதுகாப்பு பணிகள் தீவிரம்

நாகையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா இன்று காலை 11 மணிக்கு நாகூரிலுள்ள பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெறும் விழாவை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


