News December 9, 2025
யாரிடம் பிரிவினை உள்ளது? MP ஆ.ராசா

லோக்சபாவில் ‘வந்தே மாதரம்’ விவாதத்தின் போது, பிரிவினை குறித்து கூறும் PM, அது எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது? என்பதை விளக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார். வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
Similar News
News April 3, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $108 குறைந்து $4,676-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $72-க்கு விற்பனையாகிறது. காலை 9 மணி வரை இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News April 3, 2026
விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு பயமா?

சென்னையில் விஜய்க்கு கூடிய கட்டுங்கடங்காத கூட்டத்தால், பிரசாரத்தை பாதியில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது, திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, சினிமா நடிகர்களுக்கு கூடும் கூட்டத்தை, பல ஆண்டுகளாக பார்த்து பழக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேகங்கள் கலைவதை போல அக்கூட்டம் கலைந்து போகும் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 3, 2026
ஓட்டுக்கு பணம் வாங்குவது ஜனநாயக துரோகம்: சீமான்

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை, கோடிகளை சம்பாதிக்கவே வருவதாக சீமான் கூறியுள்ளார். குன்னூரில் பிரசாரம் செய்த சீமான், பணத்திற்காக நீங்கள் ஓட்டை விற்றால், அது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் தேசத் துரோகம் என்றும் தெரிவித்தார். மேலும், இலவசங்களை நம்பி ஏமாந்து வாக்களிக்காதீர்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். <<-se>>#TNElection2026<<>>


