News December 29, 2025
யாராவது கீழே விழுவதை பார்த்தால் சிரிப்பு வருவது ஏன்?

ஒருவர் கீழே விழுவதை பார்த்ததும் பல சமயங்களில் நமக்கு சிரிப்பு வந்திருக்கும். இதற்கு நமது மூளையில் உள்ள மிரர் நியூரான்கள்தான் காரணமாம். அதாவது, ஒருவர் கீழே விழும்போது, நாமே விழுவது போன்ற ஒரு பிரம்மையை இந்த மிரர் நியூரான்கள் ஏற்படுத்துமாம். அப்போது உடம்பில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதால் சிரிப்பு வருவதாக அறிவியல் சொல்கிறது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News February 5, 2026
போன்/ கம்ப்யூட்டர் பார்த்து கண் எரிச்சலா? தவிர்க்க 7 டிப்ஸ்!

கணினி மயமாகிவிட்ட உலகில், கம்ப்யூட்டர், போனை பார்த்தபடியே தான் பலரும் வாழ்கிறோம். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுபவர்களில் ஒருவர் தான் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.
News February 5, 2026
மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.
News February 5, 2026
234 தொகுதிகளிலும்.. தேமுதிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். பிப்.6 முதல் பிப்.12 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படும் என கூறிய அவர், சென்னை ஆபீஸில் 12-ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். கட்டணமாக பொதுத்தொகுதிக்கு ₹15,000, தனித்தொகுதிக்கு ₹10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


