News August 26, 2024

யானை மிதித்ததில் ஒருவர் படுகாயம்

image

செங்கோட்டை தாலுகா பண்பொழி அருகில் உள்ள கரிசல்பட்டி பகுதியில் ஒற்றை யானை அதிகாலை முதல் அப்பகுதியில் சுற்றி வருகிறது. கரிசல் குடியிருப்பு குளத்தில் பதுங்கிய யானை தனியார் தோட்டத்தில் இருந்த ஆறுமுகசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News March 3, 2026

தென்காசியில் போட்டியிட நகரமன்ற தலைவர் விருப்ப மனு

image

திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு வரும் மார்ச் 6 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.

News March 3, 2026

தென்காசி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேதராஜ் (52). இவர் திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்.2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!