News May 24, 2024
யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில வனத்துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்துகிறது. குமரி மாவட்டத்தில் 18 பகுதிகளில் 4 வனச்சரகர்கள், மேற்பார்வையில் 49, ஊழியர்கள் 22 தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று துவங்கிய பணி நாளை முடிவடைகிறது. வனத்தில் யானை செல்லும் பாதை, யானை சாணம் ஆகியவற்றை வைத்து கணக்கிடும் பணி நடக்கிறது என மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
குமரி : தபால் துறையில் 453 கோடிக்கு காப்பீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு 13,000 வாடிக்கையாளர்கள் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூபாய் 178 கோடியும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 275 கோடியும் என மொத்தம் 453 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளனர் என்று கன்னியாகுமரி கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
News April 20, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9.30 மணி – பூதப்பாண்டி பேரூராட்சி ஈசாந்திமங்கலம் ஊராட்சி, இறச்சகுளம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து இறச்சகுளம் சந்திப்பில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலை மணி – வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாறு பாவா காசிம் திடலில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
News April 20, 2025
குமரி: கடனை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

சந்தையடி தேரிவிளையைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவர் ஜேசிபி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆதிராஜனுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஹரிஹரசுதன் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஹரிஹரசுதன் கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஆதிராஜன் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆதிராஜனை கைது செய்தனர்.