News January 20, 2026
மோதல் அரசியலுக்கு விதை தூவும் கவர்னர்: CPI

அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் TN-ல் மோதல் அரசியலுக்கு விதை தூவுகிறார் கவர்னர் ரவி என CPI மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஆரம்ப நாளிலிருந்தே அரசியலமைப்பை மீறி, TN அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், ரவியை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். மேலும், ஆளும் அரசு மீது எந்த ஆதாரமும் இல்லாத அரசியல் அவதூறுகளை அறிக்கையாக வெளியிட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News February 3, 2026
கூட்டணி அறிவிப்பு; பிரேமலதா முடிவை மாற்றியது ஏன்?

பிப்.3-ல் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்த <<19037842>>பிரேமலதா<<>>, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் சீட் விவகாரம் என சொல்லப்படுகிறது. தேமுதிகவை கூட்டணியில் இணைக்க விரும்பினாலும், திமுக(6), அதிமுக(9+1) தொகுதிகள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டார்களாம். இதனால், கூட்டணி அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ள பிரேமலதா, அதிமுகவா, தவெகவா என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறாராம்.
News February 3, 2026
தவறாக தொட்டவனை பளாரென அடித்த நடிகை ரேவதி

பள்ளிப் பருவத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை ரேவதி மனம் திறந்துள்ளார். அதில், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை பஸ்ஸில் ஒருவன் தவறாக தொட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்திலேயே அவனை பளாரென அடித்ததாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அம்மா கொடுத்த தைரியத்தாலேயே இப்படி செய்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்.
News February 3, 2026
விரைவில் களமிறங்கும் CSK மகளிர் படை..!

மகளிர் அணியை வாங்குவதே தங்களது அடுத்த இலக்கு என CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் பட்டங்களுடன் வெற்றிகரமான அணியாக CSK உள்ளது. எனினும் WPL தொடரில் இன்னும் பங்கேற்காமல் விலகியே உள்ளது. இந்நிலையில் உடனடியாக இல்லாவிட்டாலும், வரும் ஆண்டுகளில் நிச்சயமாக மகளிர் அணி உருவாகும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


