News August 25, 2024

மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

image

மத்திய அரசுக்கு எதிராக நவ. 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் MSP உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பட்ஜெட்டில் விவசாயிகளை மோடி அரசு புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளன. அத்துடன், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக களம் காணவுள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.

Similar News

News October 14, 2025

பைக்/ காரில் டேங்க் ஃபுல் பண்ற பழக்கம் இருக்கா.. உஷார்!

image

டேங்க் ஃபுல் செய்வதால் வண்டியே வெடிக்கலாம் என்பது தெரியுமா? டேங்கில் ‘Cut off level’ என்பது இருக்கும். அதுவரை மட்டுமே எரிபொருள் நிரப்பணும். டேங்கை மூடிய பிறகு, வெப்பநிலை அதிகரிப்பதால், எரிபொருள் விரிவடையும். அதற்காக ‘Cut off level’ கொடுக்கப்படுகிறது. டேங்க் நிரம்பி இருந்தால், எரிபொருள் வழிந்து Evaporating சிஸ்டமில் பிரச்னை உருவாகி, Spark வந்தால், வண்டி வெடிக்கும் சூழலும் ஏற்படலாம். கவனமா இருங்க!

News October 14, 2025

கேஸ் சிலிண்டர்.. வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

image

LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் தவிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், LPG கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. இதனையடுத்து ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இனி தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.

News October 14, 2025

சற்றுமுன்: குழு அமைத்தார் விஜய்

image

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்க உள்ள நிலையில், N.ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார். இக்குழு, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய உள்ளதாம். மேலும், அவர்களுக்கான உணவு, பஸ் உள்ளிட்ட வசதிகளையும் தவெக ஏற்பாடு செய்ய உள்ளது.

error: Content is protected !!