News August 9, 2024
மோசடி நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.
Similar News
News December 26, 2025
கோவை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
News December 26, 2025
கோவை: மின் தடையா..? உடனே CALL

கோவை மக்களே.., உங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 26, 2025
BREAKING: கோவையில் மீண்டும் மீண்டுமா?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்ககு கடந்த இரண்டு மாதங்களாக, அடையாளம் தெரியாத மர்மநபர்களால், இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று 22வது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.


