News February 23, 2025
மோசடி செய்த 2 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து

சேலம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர் பயிற்சிக்காக 2023ஆம் ஆண்டு வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பயிற்சிக்கு வராமல், வந்ததாக வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
சேலத்தில் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான தொகை ரூபாய் 33.07 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
சேலம் மாநகர காவல்துறை இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News July 6, 2025
தடகளத்தில் தங்கம் வென்ற சேலம் காவலர்!

அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்று வரும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.