News April 13, 2025
மொபெட் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி

வந்தவாசியை அடுத்த நூத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (46). இவரது மனைவி அஞ்சலை (39), இவர்கள் வீரம்பாக்கம் – தென்இலுப்பை சாலையில், வீரம்பாக்கம் ஏரிக்கரை அருகே மொபட்டில் சென்றனர். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மொபட்டி மீது மோதியது. இந்த விபத்தில் ராமஜெயம் அதே இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அஞ்சலை படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

தி.மலையில் சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது. தி.மலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை சன்னதியில், சிவலிங்க திருமேனியை சூரிய பகவான் வணங்குவதாக சொல்லப்படும் ஐதீகம். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்வு நடந்தேறியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்களை கண்டால் 100 டயல் செய்யவும்.