News November 22, 2025
மொடக்குறிச்சி அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து

ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதமாக விதமாக அந்த வழியே வந்த சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் தப்பினர் இது குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News November 22, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

கார் ஓட்டும்போது மொபைலில் மெசேஜ் அனுப்புவது கவனச்சிதறலை ஏற்படுத்தி பெரும் விபத்துகளுக்கு காரணமாகும், என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைலை பயன்படுத்தக் கூடாது; அவசரமாக இருந்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பின்னர் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் ஃபோனை அணுக முடியாத இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 22, 2025
சிவகிரியில் பட்டப்பகலில் கொள்ளையர்கள்!

சிவகிரி அருகே குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபாளையத்தை சேர்ந்த ராவுத்தகுமார் (39), தோட்டத்திற்கு புறப்பட்டபோது சந்தேகமான 2 பேர் வீட்டை நோக்கி நின்று இருந்தனர். திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்து திருட முயன்றனர். ராவுத்தகுமார் சத்தமிட்டதால், மர்ம நபர்கள் அவரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
News November 22, 2025
ஜெருசலேம் புனிதபயணத்துக்கு மானியம்

நவ.1 பிறகு ஜெருசலேம் புனிதபயணம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியமாக வழங்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். 28-2-26க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-க்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.


