News January 20, 2026

மைக் ஆஃப் செய்யப்படவில்லை: அமைச்சர் ரகுபதி

image

சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தும், அரசின் உரையை கவர்னர் வாசிக்காமல் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறிய அவர், எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கவர்னர் வெளியேறிய உடனே 3 பக்க அறிக்கை வருகிறது என்றால் அது திட்டமிடப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News April 8, 2026

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரான் எண்ணெய்

image

சீனா சென்று கொண்டிருந்த ‘ஜயா’ என்ற ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் தற்போது இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 2019-ல் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா தற்போது நீக்கியதைத் தொடர்ந்து, சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வர உள்ளது. இதுவரை UAE, குவைத், சவுதி மற்றும் பிற நாடுகளில் இருந்து மட்டுமே ஹார்முஸ் வழியாக நமக்கு எண்ணெய் வந்துகொண்டிருந்தது.

News April 8, 2026

பாஜகவின் கட்டளைகளை EC நிறைவேற்றுகிறது: ஸ்டாலின்

image

தமிழகத்தின் தலைமை செயலாளர், IPS அதிகாரிகள் மாற்றத்திற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக பாஜகவின் கட்டளைகளை EC நிறைவேற்றி வருவதாக தனது X பதிவில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது அதிகார அத்துமீறல், ஆணவத்தின் உச்சக்கட்டம் என குறிப்பிட்டுள்ள அவர், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழகத்தில் NDA கூட்டணி மண்ணைக் கவ்வுவது உறுதி எனவும் கூறியுள்ளார்.

News April 8, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. கணவர் கண்ணீர்

image

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் சீரியல் நடிகை <<19578782>>சுபாஷினி தற்கொலை<<>> செய்து கொண்டது சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், சுபாஷினி குறித்து அவரது கணவர் பிபின் சந்திரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘பேபி உன்னை போல் என்னை யாரும் காதலித்தது இல்லை. என் நினைவில், எனக்குள் நீ எப்போதும் வாழ்கிறாய். நீ உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!