News May 28, 2024
மே.30 இல் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி முதல்வர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
அரியலூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரியலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News November 27, 2025
அரியலூரில் மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் கீழபழுர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே கீழபழுர் மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பொய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
News November 27, 2025
அரியலூர்: அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் வருகிற நவ.29 தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


