News April 26, 2025
மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Similar News
News August 25, 2025
வேலூர்: நாளை எங்கெங்கெல்லாம் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.26) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்; 1.வேலூர் மாநகராட்சி – சாலம்மாள் கல்யாண மண்டபம் சைதாப்பேட்டை. 2.பள்ளிகொண்டா – பேரூராட்சி அலுவலகம் சமுதாயக்கூடம். 3.காட்பாடி- ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கரிகிரி.
4.அணைக்கட்டு- டி.எம்.டி மஹால் கழனிபாக்கம். 5.குடியாத்தம்- வி.பி மஹால் நெல்லூர்பேட்டை. 6.பேரணாம்பட்டு-சாந்தி ஜீவா திருமண மண்டபம் சின்ன தாமல் செருவு.
News August 25, 2025
பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்

காட்பாடி, குகையநல்லூர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிக்கு அலுமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளியில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட பலர் உடன் இருந்தனர்.
News August 25, 2025
கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.