News April 16, 2025

மேல்மலையனுார் கோயிலில் காணிக்கை வசூல்

image

மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில்  உண்டியல் எண்ணும் பணி நேற்று ஏப்.15 காலை துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம் ,190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Similar News

News April 19, 2025

ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

News April 18, 2025

தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

image

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது’ என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி நல்லூரில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 18, 2025

இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!