News May 1, 2024

மேலூர் : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

image

மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் உள்ள குழிச்சேவல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி அனிதா தம்பதியரின் மூன்றரை வயது குழந்தை தர்ஷன். இக்குழந்தை இன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்தது. சிறிது நேரம் கழித்த தாய் குழந்தை தேடிய போது குழந்தை தொட்டி நீரில் விழுந்து பலியானது தெரிந்தது.

Similar News

News November 22, 2025

மதுரை: இன்றும் நாளையும் மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கீட்டு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டுள்ளன. இதனை பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது. கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெறலாம்.சந்தேகங்களுக்கு 1950 உதவி எண்ணை அழைக்கலாம். தெரியாதவர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மதுரை: கோழிகளை விழுங்கிய பாம்பு..!

image

கொட்டாம்பட்டி அருகே பட்டமங்கலப்பட்டி கிராமத்தில், ஆண்டிச்சாமி என்ற விவசாயின் வீட்டின் அருகே குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வந்து கோழிகளை நேற்று விழுங்க தொடங்கியது. தகவல் அறிந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சென்ற ரஞ்சித்குமார், கண்ணன், தங்கப்பாண்டி, விஜயராஜ் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் அப்பாம்பை பிடித்து, வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

News November 21, 2025

மதுரை: ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை., தேர்வு இல்லை!

image

மதுரை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!