News December 7, 2025
மேலூரில் மதுக் கடத்திய போலீஸ்காரர் கைது

மதுரை மாவட்டம் மேலூரில் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மது பாட்டில்கள் கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ்காரர் பாண்டி குமார் என்பவரை கைது செய்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
மதுரையில் நாளை (டிச.11) மின்தடை அறிவிப்பு

மதுரையில் நாளை (டிச.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர்காலனி, கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்திநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வாரிய காலனி, சண்முகா நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
மதுரை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ரூ.1 கோடி சவால்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கார்த்திகை தீபத்தூனை சர்வே கல் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டால் கோவை பிரதர் சார்பாக ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சவால் விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் துரை சரவணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 10, 2025
மதுரையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2.உயர்நீதிமன்றம் மதுரை கிளை: 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


