News January 10, 2025

மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை (ஜன.11) இரவு 11.35 மணிக்கும். மறுமார்க்கமாக, 12ஆம் தேதி பகல் 12 மணிக்கும், எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை இரவு 11.45 மணிக்கும். மறுமார்க்கமாக, 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கும். சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு நாளை மதியம் 3.30 மணிக்கும், மறுமார்க்கமாக இரவு 7 மணிக்கும் புறப்படும்.

Similar News

News August 25, 2025

BIG NEWS: சென்னையில் 2 பேர் பரிதாப பலி

image

சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.

News August 25, 2025

BREAKING: மயிலாப்பூர் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

image

தேசிய ஆசிரியர் விருது, ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பையும், பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் மத்திய அரசின் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவரால் இது வழங்கப்படுகிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தமிழகத்திலிருந்து இந்தாண்டு தேர்வாகியுள்ளனர்.

News August 25, 2025

நல்லக்கண்ணு உடல்நிலை குறித்து திருமாவளவன் நேரில் விசாரிப்பு

image

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று (ஆக.25 ) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலன் குறித்தும், சிகிச்சை குறித்தும் விசாரித்தார். மேலும், அவரின் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தார்.

error: Content is protected !!