News August 14, 2024
மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் பொறுப்பேற்பு

கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News September 18, 2025
சேலம்: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

சேலம் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 18, 2025
காய்ச்சல், வலி மாத்திரை விற்றால் நடவடிக்கை!

சேலம் சரகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் செயல்பட்டு வருகிறது. காய்ச்சல், தூக்கம், வலி நிவாரண மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி கொடுக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின் கீழ் கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும், கடையின் உரிமம் ரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 18, 2025
அமைச்சர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் தொடங்கியது!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.18) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேகோ சர்வ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.