News November 15, 2025
மேட்டூர் அருகே இளம்பெண் விபரீத முடிவு

சேலம், மேட்டூர் பெரியண்ண கவுண்டர் நகரைச் சேர்ந்த சுருதி (24) என்பவர், விவசாய நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக கணவர் சதீஷ்குமாருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
சேலம்: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 15, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களை மீட்டு நல்வாழ்வு படுத்துவதற்கான போதை மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மையம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 15, 2025
போதையில் அரசு பஸ்சை வழி மறைத்த இரண்டு பேர் கைது!

கெங்கவல்லி 4 ரோடு பகுதியில் உள்ள பூக்கடை முன்பு இன்று திருச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சை ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி (23) லாரி ஓட்டுனர் இவருடைய நண்பர் பெரியசாமி மகன் பாலாஜி (25) இருவரும் மது போதையில் அரசு பஸ்சை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


