News July 31, 2024
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேல் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. விரைவில் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், எனவே காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கரூர் கலெக்டருக்கு மேட்டூர் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
கரூர் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கரூர் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
News August 20, 2025
கரூர்: மேனேஜர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்

கரூர் மக்களே தேசிய அனல் மின் நிறுவனமான NTPCல் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2.20 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 20, 2025
கரூர் மக்களே முற்றிலும் இலவசம்!

கரூர் மக்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது.பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். <