News December 20, 2024
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

சேலம், மேட்டூர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது அணைக்கு வரும் நீரின் அளவு 4,000 கனடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 91 டிஎம்சி ஆகவும் நீர்மட்டம் 119 அடியாகவும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு நாட்களில் மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 14, 2025
இலவசம்..அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகின்ற நவ.19ஆம் முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA – முதன்மைத் (Mains) தேர்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் பிருந்தா தேவி அழைப்பு விடுத்துள்ளார்.
News November 14, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 13, 2025
15ஆம் தேதி முதல் புதிய ரயில் பெட்டிகள் அறிமுகம்!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும், சேலம், சென்னை, எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் இதுவரை சாதாரண பெட்டிகள் பயன்படுத்தி வந்த நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் அதிநவீன எல்ஹச்பி எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிர்வை குறைத்து, பாதுகாப்பு வசதியுடன் கூடிய பெட்டிகள் இயக்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


