News July 17, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

image

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அளவிற்கு உயர்ந்தது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 16,577 கன அடியில் இருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

Similar News

News August 21, 2025

சேலத்தில் வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்

image

கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News August 21, 2025

சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்

News August 21, 2025

சேலத்தில் நாய்க்கடிக்கு உயிர் பலி; இதை பண்ணுங்க!

image

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் தொந்தரவு அல்லது நாய்க்கடி போன்ற பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!