News August 18, 2025
மேட்டுர் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம், மேட்டுர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கரையோரம் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக வெளியேறினர்.
Similar News
News August 18, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று (ஆகஸ்ட் 18) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது.
News August 18, 2025
சேலம்: ரூ.128 கோடி கல்வி கடன் இலக்கு ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் 163 கல்லூரிகள், 47 வங்கிகளும், 550 கிளைகளும் மாவட்டத்தில் உள்ளது. இவற்றின் வாயிலாக மாணாகர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் 6600 மாணவர்களுக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை காலாண்டில் 1378 மாணவர்களுக்கு ரூ.21 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுரை

குற்றத் தடுப்பு மற்றும் குற்றங்களை கண்டறிவதில் உதவியாக இருக்கும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வீடுகள், கடைகள், போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது பாதுகாப்பை அதிகரிப்பதோடு, சந்தேக நபர்களை அடையாளம் காணவும் உதவுகிறது. அனைவரும் ஒத்துழைத்து கேமரா பொருத்தி, சமூகத்தின் பாதுகாப்பில் பங்கு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.