News January 17, 2025
மேட்டுநாகலேரி கிராமத்தை சார்ந்த திருநங்கை தற்கொலை

மேட்டுநாகலேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஆனந்தராஜ். திருநங்கையான இவர் நேற்று முன்தினம் செலவுக்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம்தர மறுத்ததால் வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
ராணிப்பேட்டை மக்களே ஜாக்கிரதை!

ராணிப்பேட்டை மக்களே, இன்று காலை 10 மணி வரை உங்கள் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானியால் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் நிரப்பி வைப்பது, சாதனங்களுக்கு சார்ஜ் போடுவது, வெளியில் செல்லும்போது குடை கொண்டு செல்வது போன்ற முக்கியமான வேலைகளை முடித்து வைத்துக்கொள்ளுங்கள். சாலையில் கவனமாக போங்க. SHARE பண்ணுங்க.
News August 23, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் -22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 23, 2025
ராணிப்பேட்டை: இலவச பயிற்சி வகுப்பு

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 2ம் நிலை காவலர் பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/DV9npFmjGcFgBexG7 என்ற
Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.