News January 24, 2026
மெளனம் கலைக்கும் விஜய்

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து விஜய் மௌனியாக இருக்கிறார் என பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நாளை நடைபெறும் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் இவ்விவகாரங்கள் குறித்து விரிவாக விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. மேலும், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பையும் விஜய் வெளியிடவுள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News February 9, 2026
ஏப்.13-ல் தமிழகத்திற்கு தேர்தல்?.. வந்தாச்சு அப்டேட்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்.13-ம் தேதி நடத்த ECI திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, 10 நாள்களுக்கு பிறகு வாக்குப்பதிவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ECI துணை ஆணையர் <<19077197>>பானு பிரகாஷ் எத்துரு <<>>நாளை மறுநாள்(பிப்.11) தமிழகம் வருகிறார். அவரது ஆய்வுக்கு பிறகு தேர்தல் தேதியை இறுதி செய்து அறிவிப்பு வெளியாகும்.
News February 9, 2026
ஒரு நிமிடம் போதும்.. வேலை அழுத்தத்தை குறைக்கலாம்!

அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா? வேகஸ் நரம்பை தூண்டுவதன் மூலம், இந்த மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு நீங்கள், மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும். இடைநிறுத்தி மீண்டும் மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை வெளியேவிடவும். இதை 4-5 முறை செய்தால், மன அழுத்தம் குறையும்.
News February 9, 2026
சற்றுமுன்: விஜய் அவசர அறிவிப்பு

தவெக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக விஜய் திடீரென அறிவித்துள்ளார். நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ள ஆலோசனையில், மா.செ.,க்களுடன் விஜய் தனித்தனியே பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் தவெகவுக்கு உள்ள பலம் மற்றும் பலவீனம் குறித்து அவர் கேட்டு தெரிந்துகொள்ள உள்ளாராம். மேலும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான அறிவுரைகளையும் விஜய் வழங்க உள்ளார்.


