News January 22, 2026

மெரினாவில் 300 கடைகள் மட்டும் தான்!

image

மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி என். பால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி. மோகன்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற துணை பதிவாளர் ஆர். ரங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் 300 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2026

சென்னை: உள்ளாடையுடன் தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

image

சென்னை எழும்பூரில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இசசம்பவம் தொடர்பாக பெண் காவலரை அவரது கணவரே அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக தாய் கண்ணீர் மல்க எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், வெறும் உள்ளாடையுடன் யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என காவலரின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார்.

News February 13, 2026

சென்னை: 10 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த நபர் கைது!

image

2013ம் ஆண்டு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், பிணையில் வெளியேறிய பின்னர் 2016 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 2025 ஏப்ரல் 9 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சுமார் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சதீஷை, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, வேளச்சேரி நேரு நகர் பகுதியில் நேற்று கைது செய்தனர்.

News February 13, 2026

கோயம்பேட்டில் பேருந்தை கொளுத்திய ஆசாமி!

image

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் நின்ற பேருந்தில் தீ வைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். உடனடியாக தீ அணைக்கப்பட்ட நிலையில், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒருவர் பேப்பரில் தீ பற்ற வைத்து பேருந்துக்குள் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!