News January 1, 2026
மெத்தையில் கொட்டிக்கிடந்த கோடிகள் (PHOTOS)

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது, ED அதிகாரிகளே திகைத்துப் போகும் அளவுக்கு, ₹5.12 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளி இந்தர்ஜித் சிங் யாதவ் தொடர்பான பணமோசடி வழக்கில், அவரது கூட்டாளி வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ₹8.80 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ₹35 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News January 6, 2026
₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News January 6, 2026
பொங்கல் விடுமுறை.. ஜன.9 முதல் சிறப்பு பஸ்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஜன.9 – 14 வரையிலான 6 நாள்களில், வழக்கமாக இயக்கப்படும் (2,092) பஸ்களை விட கூடுதல் எண்ணிக்கையில் (22,797) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊர் செல்வோர் இங்கே <
News January 6, 2026
₹9.2 கோடி இல்லை.. வெறும் கையோடு திரும்பும் வீரர்!

₹9.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிஃசுர் ரஹ்மானை KKR விடுவித்துள்ளது. பொதுவாக, ஒரு வீரர் காயம் (அ) வேறு எந்த தவறும் செய்யாத நிலையிலோ அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு அந்த அணி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஆனால் <<18751941>>முஸ்தபிஃசுர்<<>>, இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, BCCI உத்தரவால் விடுவிக்கப்பட்டதால், அவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என கூறப்படுகிறது.


