News January 1, 2026

மெத்தையில் கொட்டிக்கிடந்த கோடிகள் (PHOTOS)

image

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது, ED அதிகாரிகளே திகைத்துப் போகும் அளவுக்கு, ₹5.12 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளி இந்தர்ஜித் சிங் யாதவ் தொடர்பான பணமோசடி வழக்கில், அவரது கூட்டாளி வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ₹8.80 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ₹35 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News January 6, 2026

₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

image

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2026

பொங்கல் விடுமுறை.. ஜன.9 முதல் சிறப்பு பஸ்கள்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஜன.9 – 14 வரையிலான 6 நாள்களில், வழக்கமாக இயக்கப்படும் (2,092) பஸ்களை விட கூடுதல் எண்ணிக்கையில் (22,797) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊர் செல்வோர் இங்கே <>கிளிக்<<>> செய்து உடனே புக் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

₹9.2 கோடி இல்லை.. வெறும் கையோடு திரும்பும் வீரர்!

image

₹9.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிஃசுர் ரஹ்மானை KKR விடுவித்துள்ளது. பொதுவாக, ஒரு வீரர் காயம் (அ) வேறு எந்த தவறும் செய்யாத நிலையிலோ அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு அந்த அணி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஆனால் <<18751941>>முஸ்தபிஃசுர்<<>>, இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, BCCI உத்தரவால் விடுவிக்கப்பட்டதால், அவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!