News January 1, 2026
மெத்தையில் கொட்டிக்கிடந்த கோடிகள் (PHOTOS)

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது, ED அதிகாரிகளே திகைத்துப் போகும் அளவுக்கு, ₹5.12 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளி இந்தர்ஜித் சிங் யாதவ் தொடர்பான பணமோசடி வழக்கில், அவரது கூட்டாளி வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ₹8.80 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ₹35 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News January 21, 2026
உங்கள் குழந்தைக்கு இந்த பிரச்னை இருக்கா?

தற்போது பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்படைவதால் அவர்களுக்கு PCOS போன்ற பிரச்னைகள் வருமோ என பெற்றோர் வருந்துகின்றனர். ஆனால் பூப்படைந்த முதல் 2 வருடங்களில் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் சொல்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகும்/, சீரற்ற மாதவிடாய், குறைவான ரத்தப்போக்கு, முகத்தில் அதீத முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு டாக்டரை அணுகுங்கள். விழிப்புணர்வுக்காக, SHARE.
News January 21, 2026
‘நான் சாகப்போறேன்.. அப்பா என்னை மன்னிச்சிரு’

‘என்னை மன்னித்து விடுங்கள்… ஐ லவ் யூ அம்மா, அப்பா’. நாசிக்கில் மாற்றுத் திறனாளி பெண்ணான திக்ஷா(21), தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கையில் எழுதிய வாசகம் இது. தங்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த மகள் இப்படி செய்துவிட்டாளே என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். வீட்டில் தூக்கிட்டு கொண்ட திக்ஷாவின் சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்.
News January 21, 2026
சற்றுமுன்: விஜய் முக்கிய முடிவு

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் ஜன.25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின், அரசியல் நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை, சிபிஐ விசாரணை ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த விஜய், இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதில், தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.


