News November 19, 2025
மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.
Similar News
News November 19, 2025
காட்டாட்சி முடிவுக்கு வரும்: நயினார் நாகேந்திரன்

<<18327587>>ராமேஸ்வரத்தில்<<>> பள்ளி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை என்று விமர்சித்துள்ள அவர், பெண்களுக்கெதிரான ஆட்சி இனி தமிழகத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார். 2026-ல் திமுகவின் காட்டாட்சி முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 19, 2025
பொய் சொல்லும் CM ஸ்டாலின்: அன்புமணி

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய் கூறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 5% முதலீடுகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறிய அவர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பயந்து ஓடுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பொய்யை தவிர CM-க்கு வேற எதுவும் தெரியவில்லை என்றும் போதிய முதலீடுகள் இல்லாததால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் எனவும் சாடினார்.
News November 19, 2025
BREAKING: வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. செக் பண்ணுங்க

கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2,000-ஐ மோடி விடுவித்தார். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தவணையை பெற தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையையும் (₹4,000) சேர்த்து வழங்க வழிவகை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


