News November 19, 2025
மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.
Similar News
News April 9, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. அமைச்சரவை ஒப்புதல்

மகளிர் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2011 சென்சஸ் அடிப்படையில், 2029 முதல் லோக்சபா தொகுதிகள் 543-ல் இருந்து 816-ஆக உயரும். இதில் 33% அதாவது 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். ஏப்ரல் 16-ல் தொடங்கும் 3 நாள் சிறப்பு அமர்வில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 9, 2026
2026 தேர்தல் முடிவை மாற்றுமா தவெக?

தமிழ்நாடு அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளின் ஆதிக்கம் தான் கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த இரு துருவ அரசியலை, <<19608397>>தவெகவின்<<>> வருகை மாற்றும் என்கின்றனர் தேர்தல் வியூக வல்லுநர்கள். தவெகவுக்கு 10-20% வாக்குகள் கிடைக்கும் எனப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் பார்த்தால், 2026 தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தவெக இருக்கும் என்கின்றனர்.
News April 9, 2026
நடிகை சுபாஷினி தற்கொலை.. சக நடிகை கண்ணீர்

தற்கொலை செய்து கொண்ட <<19578782>>நடிகை சுபாஷினி<<>> குறித்து கயல் சீரியல் நடிகை அபிநவ்யா உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சுபாஷினி அனைவருடனும் மிகவும் நட்பாக பழகும் குணம் கொண்டவர்; எப்போதும் பாசிட்டிவாக இருந்தவர் என குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்தால், முதல் ஆளாக ஆறுதல் கூறிய அவர், இப்படிப்பட்ட சோக முடிவை எடுத்தது பெரும் வேதனை அளிப்பதாகவும் அபிநவ்யா சோகத்துடன் தெரிவித்துள்ளார்.


