News January 31, 2025

மூதாட்டி கொலை: தாயும், மகனும் கைது

image

கடந்த 27ஆம் தேதி அரியானூர் அருகே 88வயது மூதாட்டி சின்னத்தாயி கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர். அதில், வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவனை பள்ளிக்குச் செல்ல கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் கத்தியால் சின்னத்தாயை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் சிறுவன் மற்றும் குற்றத்தை மறைத்த அவரது தாய்யை கைது செய்தனர். 

Similar News

News September 10, 2025

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாநகராட்சியில் (10.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News September 10, 2025

சேலம்: பொருளாதார குற்றமா அழையுங்கள் 1930!

image

சேலம் மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகிறது ஆகையால் பொதுமக்கள் செல்போனில் வரும் எந்த விதமான கடன் உதவிகள் கட்டண விளையாட்டுகள் போன்ற எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 10, 2025

சேலம்: திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்!

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 32) என்பவர் மணியனூரைச் சேர்ந்த திருநங்கை சரோ என்பவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைபடி திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பினரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் வாழ்த்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள்!

error: Content is protected !!