News October 28, 2024
மூதாட்டியிடம் நகையை பறித்த நபர் கைது

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியில் இருந்த 2.5 பவுன் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.
Similar News
News February 10, 2026
மயிலாடுதுறை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
மயிலாடுதுறை: எஸ் பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து காவல்துறை அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
News February 10, 2026
மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 404 மனுக்கள்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மக்கள்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 404 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


