News October 28, 2024
மூதாட்டியிடம் நகையை பறித்த நபர் கைது

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியில் இருந்த 2.5 பவுன் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.
Similar News
News August 14, 2025
மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்பத்தாரின் விபரத்தோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW
News August 14, 2025
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல் துறை சார்பில் இன்று நடைபெற்றது. டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ராஜா அண்ணாதுரை சுகுணா விஜயா முன்னிலை வகித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.வைத்தீஸ்வரன் கோயில் எஸ்ஐ சூரியமூர்த்தி விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
News August 14, 2025
மயிலாடுதுறை: VAO லஞ்சம் கேட்கிறாரா? இத பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!