News March 28, 2025
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 30, 2025
கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால் தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
News March 30, 2025
சிலிண்டர் எடை குறைவு: ரூ.1 லட்சம் அபராதம்

கோவையைச் சேர்ந்தவர் நிர்மல் காளிநாத். இவர் வீட்டிற்கு சிலிண்டர் வாங்கியுள்ளார். சிலிண்டர் எடை குறைவாக இருந்தது. இதுகுறித்து காஸ் ஏஜென்சியிடம் புகார் தெரிவித்த போது பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்து, நிர்மல் காளிநாத்திற்கு இழப்பீடாக ரூ.20,000, வழக்கு செலவு ரூ.5,000 வழங்க உத்தரவிட்டது. உங்க வீட்டு சிலிண்டரை செக் பண்ணுங்க(SHARE பண்ணுங்க)
News March 30, 2025
கோவை மக்களே இத பண்ணுங்க!

கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கோவை மாநகராட்சி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.