News October 23, 2024
முழு கொள்ளளவை எட்டாததால் நீர் இருப்பு குறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. மொத்த ஏரிகளில் 11 ஏரிகள் 75 சதவீதமும், 93 ஏரிகள் 50 சதவீதமும், 275 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News September 16, 2025
பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பிறந்தநாள் வாழ்த்து

நாளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பி.எம்.கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கும், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் உயர்த்தி கொடுத்ததற்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாய மக்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரில் மோடியின் பெயரை வரைந்து வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தனர்.
News September 16, 2025
காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்றத்தூர் ஒன்றியத்தில் சேக்கிழார் நகர், வரதராஜபுரம் ஊராட்சி மற்றும் பூந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் கிளாய் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
News September 16, 2025
துணை முதல்வரிடம் காஞ்சி விவசாயிகள் மனு

காஞ்சி விவசாயிகளின் நீர் பாசனத்துக்கு பயன்படும் பிவிசி பைப்புகள், பயோ சார் கோல் பிளான்ட் விவசாய கழிவுகள், பயோ கேஸ் அமைப்புகளை 50% மானியத்திலும் , காஞ்சியில் விவசாயக் கல்லூரி, கே வி கே அமைக்கவும், கரும்புக்கு கூட்டுறவு துறை போன்று தனியார் துறையிலும் ரூ 4000 வழங்க கோரி துணை முதல்வரிடம் மாநில விவசாய சங்க தலைவர் கே எழில் இன்று மனு அளித்தார்.