News August 9, 2024
முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.
Similar News
News February 9, 2026
உயிரை காப்பாற்றிய காவலருக்கு எஸ்பி பாராட்டு

நேற்று சிவகங்கை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாம்பு கடித்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால், உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜ கண்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியின் உயிரை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ராஜாராம் அவரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
News February 9, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் 10.02.2026 (ம) 17.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் கல்வி கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அங்கன்வாடி மையங்கள் நடைபெறும் இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
News February 9, 2026
தஞ்சை: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

தஞ்சை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <


