News December 12, 2025
முருகனுக்கு சுருட்டு படைத்து வழிபடும் வினோத கோயில்!

திருச்சி விராலிமலை முருகன் கோயிலில்தான் சுருட்டு படைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் முருகபக்தரான கருப்பமுத்து மழையில் சிக்கினார். ஆற்றை கடக்க முருகனிடம் வேண்டியபடி, அவர் சுருட்டு பிடித்துள்ளார். பின்னால் வந்தவருக்கும் சுருட்டை கொடுக்க, இருவரும் ஆற்றை கடந்துள்ளனர். அந்நபர் மாயமாக, கோயிலின் முருகன் சன்னதியில் சுருட்டு கிடந்துள்ளது. வழிகாட்ட முருகனே வந்ததாக கருப்பமுத்து கூற, சுருட்டு படையலானது.
Similar News
News March 6, 2026
கடைசி தோட்டா இருக்கும் வரை போராடுவோம்: ஈரான்

அமெரிக்க – இஸ்ரேல் படையெடுப்பை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறினார். கடைசி தோட்டாவும் கடைசி வீரரும் களத்தில் இருக்கும் வரை போராடுவோம் என்றும் கூறியுள்ளார். <<19300689>>IRIS தேனா கப்பல்<<>> இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்ததாகவும், எந்த ஆயுதங்களும் இல்லாத நிராயுதபாணிகளை அமெரிக்கா தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 6, 2026
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

<<19303686>>காவலாளி அஜித் குமார்<<>> மரண வழக்கில் மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களின் பெயர்களை CBI சேர்த்திருந்தது. இந்நிலையில், மார்ச் 12 வரை அந்த 4 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை சிபிஐ எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
இதுதான் என்னுடைய கனவு.. ஸ்டாலின் சொல்கிறார்

TN முழுவதுமே சமத்துவபுரமாக மாறவேண்டும், எங்கும் சமூகநீதி ஒலிக்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். இவை அனைத்தும் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல்திட்டம் வகுக்கப்படும் என்ற அவர், இது மு.க.ஸ்டாலின் கொடுக்கும் உறுதிமொழி என்றார். மேலும், TN-ன் இந்த வளர்ச்சி பயணத்தில் யாரையும் பின்தங்க விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.


