News March 26, 2025

முயல் வேட்டையின்போது துண்டான வாலிபர் விரல் 

image

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். துப்பாக்கியின் டிரிகர் பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல் வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

 ஆடு திருடிய வாலிபருக்கு தர்ம அடி

image

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(50). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டின் எதிரில் கட்டி வைத்த ஆடுகளை, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

News March 29, 2025

ஓடையில் மூழ்கி பெண் பலி

image

விழுப்புரம் பொய்யப்பாக்கம் சோ்ந்தவர் வீரம்மாள் (57). நேற்று பொய்யப்பாக்கம் ஓடைக்குச் சென்றபோது, கால் தவறி உள்ளே விழுந்தாா். நீரில் மூழ்கிய அவா் சம்பவ இடத்திலேயே உரிழந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரம்மாளின் சடலத்தைக் மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!