News November 11, 2024

மும்பை செல்லும் ரயிலில் பெட்டிகள் குறைப்பு

image

மும்பையில் இருந்து தென் தமிழகத்திற்கு வாரத்தில் ஆறு நாட்கள் மும்பை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை 4 மாநில மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலில் தற்போது 9 சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகள், 5 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் உள்ளிட்ட இறுதி பெட்டிகள் உள்ளன. வரும் 14ஆம் தேதி முதல் இந்த ரயிலில் இரண்டு மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் குறைக்கப்படுகின்றன.

Similar News

News August 22, 2025

நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

image

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.

News August 22, 2025

பள்ளிக்கு கத்தியை கொண்டு சென்ற மாணவரால் பரபரப்பு

image

திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் புத்தகப்பையில் கத்தி மறைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவனின் மிரட்டலால் பயந்து முன்னெச்சரிக்கையாக கத்தி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் மூலம் தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எச்சரித்து விடுவித்தனர்.

News August 22, 2025

சூர்ஜித்துடன் செல்போனில் பேசியவர்களுக்கு சமன்

image

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின்(27) என்பவர் கடந்த 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவர்கள் தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வரும் நிலையில் கொலை செய்த நாள் அன்று சுர்ஜித் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை சிபிசிஐடி போலீசார் கண்காணித்தனர். அதன்படி அவரது 2 உறவினர் மற்றும் நண்பரை விசாரிக்க சம்மன் அனுப்பினர்.

error: Content is protected !!