News February 16, 2025
முன்விரோத மோதல் காரணமாக ஒருவர் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், செருக்கலை தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. அதே பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், இருவருக்கும் இருந்த முன்விரோத மோதலில் வீரமணி அண்ணாதுரையை கத்தியால் குத்தியதில் அண்ணாதுரை அவ்விடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 5, 2025
நாமக்கல்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

நாமக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News September 5, 2025
கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.15 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News September 5, 2025
நாமக்கல்: 108 ஆம்புலன்ஸில் வேலை!

நாமக்கல் – மோகனூா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்தில் நாளை (செப்.6) 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு கோரும் நோ்முகத் தோ்வு, காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 89259-40969 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!