News April 15, 2025

முன்னீர்ப்பள்ளம் அருகே ஆட்டோ மோதி மூதாட்டி பலி

image

தருவை பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் மீது நேற்று (ஏப்-14) ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என முன்னீர்ப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 16, 2025

நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்?

image

நாங்குனேரியைச் சேர்ந்த சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னதுரை Grindr ஆப் மூலம் பழகிய மர்ம நபர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திற்கு இன்று வரவழைத்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துரையை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தாக்கியது தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.

News April 16, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 16, 2025

நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட தொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 17ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் தங்களது சுய விவரங்களை வந்து பங்கேற்கலாம். மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!