News April 15, 2025
முன்னீர்ப்பள்ளம் அருகே ஆட்டோ மோதி மூதாட்டி பலி

தருவை பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் மீது நேற்று (ஏப்-14) ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என முன்னீர்ப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

நெல்லை மாவட்டத்தில் இன்றிரவு (ஆகஸ்ட் 8) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.
News August 8, 2025
நெல்லை போலீசார் சாதனை – கமிஷனர் பாராட்டு

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் பதக்கங்களை வெற்று சாதனை படைத்தனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதி மணி இன்று (ஆகஸ்ட் 8) நேரில் அழைத்து பாராட்டினார். போலீஸ் துணை கமிஷனர்கள் உடன் இருந்தனர்.
News August 8, 2025
நெல்லை இளைஞர்களே அரசு வேலை – ரூ.68,000 வரை சம்பளம்!

நெல்லை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <