News April 6, 2025
முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்(59). முன்னாள் ராணுவ வீரரான இவர் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.
Similar News
News April 7, 2025
மின்சாரம் தாக்கி டீக்கடைக்காரர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நெல்லி விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ் (58). டீக்கடை நடத்தி வரும் இவர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின் ஒயரில் இணைத்து வைக்கப்பட்டிருந்த கம்பியில் கைபட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2025
வேண்டியதை நிறைவேற்றும் இசக்கியம்மன் திருக்கோயில்

கன்னியாகுமரி, முப்பந்தலில் அமைந்துள்ளது அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில். நினைத்ததை வேண்டி பித்தளை, வெண்கலம் , வெள்ளி போன்ற உலோகங்களால் ஆனா உடல் உருவத்தை நேர்த்திக்கடனாக செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் இங்கு சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, நீண்ட நாள் உடல் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்கள்
News April 6, 2025
குமரியில் 120 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.