News May 12, 2024

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

image

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தங்கள் பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News July 8, 2025

தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 7, 2025

தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

News July 7, 2025

திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!