News January 22, 2025

முன்னாள் பாஜக தலைவரை சந்தித்த ஆனந்தன் ஐயாசாமி

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் அய்யாசாமி. இவர் அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தென்காசி பாஜக நிர்வாகியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர் தென்காசி மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்னாள் பாஜக மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Similar News

News September 30, 2025

தென்காசி: ஆடு ஏறியதால் மோதல்!

image

தென்காசி, கடையம் அருகே அழகம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் (42) வீட்டில் இசக்கி வளர்க்கும் ஆடுகள் கூரை மீது ஏறியதால் முருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் முருகனையும் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினரையும் தாக்கினர். இதுக்குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News September 30, 2025

தென்காசி TNPSC தேர்வில் இத்தனை பேர் அப்செண்டா??

image

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 11,993 பேர் எழுதினர். மொத்தம் 14,980 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,987 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. 53 மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் சில தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 29, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!