News June 11, 2024
முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு புதிய பொறுப்பு

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
கள்ளக்குறிச்சிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

ஏமப்பேர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை அமைச்சர்கள் இன்று(பிப்.3) திறந்து வைக்கின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புற நகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
News February 3, 2026
கள்ளக்குறிச்சி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு!

வாணாபுரம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண்ணிடம் திருமண ஆசை காட்டியதால், இருவரும் தாம்பத்திய உறவில் இருந்தனர். இதனால், கர்ப்பமான பெண், திருமணம் செய்யும் படி கேட்டபோது, அதை மறுத்து பெண்ணை ஆபசமாக திட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ரஞ்சித் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News February 3, 2026
உளுந்தூர்பேட்டையில் துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தோளில்லா காலணி தொழிற்சாலையிl வேலை நடைபெற்று வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்(29) என்பவர் கட்டடத்தில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.


