News February 12, 2025
முன்னாள் அமைச்சர்-கொமதேக பொதுச்செயலாளர் சந்திப்பு

திருப்பூரில் அரசு சார்பில் கமிட்டி மீட்டிங் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.அப்போது அங்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் கூட்டத்திற்கு வருகை புரிந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் ஆகியோர் சந்தித்து கொண்டனர். மேலும் இருவரும் தங்களது நலம் விசாரித்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
News March 3, 2026
திருப்பூர்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS.!

திருப்பூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0421-2971141 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News March 3, 2026
திருப்பூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


