News August 26, 2024
முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
விருதுநகரில் 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா?

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருச்சுழி பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 7.60 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 6.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
News December 3, 2025
விருதுநகர்: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
விருதுநகர்: குழந்தை தத்தெடுத்து வளர்க்க அழைப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை ( 04562 – 293946) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


